Showing posts with label Kavithaikal. Show all posts
Showing posts with label Kavithaikal. Show all posts

Friday, 24 December 2021

காதலின் வழி

காதலின் வழி


என் வலி மறந்து
உன் விழிகளில்
என் வாழ்வின்
வழி தேடினேன்...

- Priya

__________________

Follow Us : YouTube

Wednesday, 4 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Mohammed Harish Akmal, Anthiyur.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****
கவிதை

திறமையோடு சிறிது பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் வறுமை என்பதே வராது...
இதை உணர்ந்தவர் வாழ்வில் துயரம் என்பதே இருக்காது

- Mohammed Harish Akmal,
Anthiyur , Erode 
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********
Photo Credit : ARToons

Tuesday, 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - இரா.காயத்ரி , தருமபுரி மாவட்டம்.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇

(Photo Credit: ARToons)

****
கவிதை

ஒரு முழம் பூ விற்க ..
ஓயாமல் காத்திருக்க..
ஒருவரும் வரவில்லையே
கொரனாவின் ஊரடங்கால்...

பள்ளிக்கூடம் மூடியிருக்கு..
படிக்க என் பிள்ளைக்கு 
ஆசையிருக்கு 
என் நிழலில் பாடம் படிச்சிருக்க..
எப்ப சாமி பள்ளிக்கூடம் 
திறக்கும் ?

- இரா.காயத்ரி,
தருமபுரி மாவட்டம்.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - Parameshwaran , Namakkal

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****
கவிதை-1

புத்தகம் பிடித்த பூச்சரமே! நான் தவமிருந்து வாங்கி வந்த வரமே, சாலையில் நீ படி நானிருப்பேன் நிழலாக, நாளை நீ வாழ்வில் முன்னேறு நானிருப்பேன் மரமாக,,,

கவிதை-2

கல்விக்கு போராடுது மலர் ஒன்று, அதற்காக வெயிலில் வாடுது வேர் இன்று...

- Parameshwaran, Drawing Master,
Namakkal.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - Suryaprakash ,Bhavani (TK) , Erode.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****

கவிதை

இறந்தகாலத்தை எண்ணி...
நிகழ்காலத்தில் வருந்தி கொண்டு இருக்கும் தாய்க்கு தெரியவில்லை...

பின்னே தனது எதிர்காலம் கல்வி என்னும் வளர்ச்சி பாதயில் போகிறது என்று...

- Suryaprakash , Bhavani (TK) , Erode.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - Dharani , Bhavani (TK) , Erode.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை

வேகாத 
    வெயிலிலே
வியாபாரம் 
     செய்யயில
வேதனைதான்       
     நெஞ்சினிலே...
தனக்கோ
     தன் பிள்ளைக்கோ
தலைவாரி
     பூச்சூடும்
வேளைதான் 
     வந்திடுமோ?
நாளும் தான்
     கூடிடுமோ?
பூச்சரம்தான்   
     விக்கலியே 
பூத்த வேர்வையும்
      காயலியே...
வேதனைதான் 
       தீரலயே ...
மகராசி மகளுந்தான்
மாற்றந்தான் தருவானு
மனசாரப் பாடுபடும்
மாதரசி நீதானோ ?
கடந்து போகும் காரெல்லாம்
கருணை வச்சு
வாங்கினா
கந்துக் கடன அடைச்ச பின்னே
கஞ்சித் தண்ணி
குடிக்கலானு
கனவு காணும்
தாயே...
காத்திருந்து பாரம்மா... 
காரேறி உன் மகளும்
பார் போற்ற வந்திடுவா...
பாரம் இறக்கி 
வைச்சிடுவா...
படிக்கும் புள்ள முகம் பார்த்து
பசி அடக்கிக் 
கொள்ளம்மா ...

- Dharani , Bhavani (TK) , Erode .
****
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
****
Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - Yogiraj , Chennai

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை

முல்லைக்காக மல்லிகை விற்கும் அம்மா...!

குடிகாரனக் கட்டியதால
கட்டிய தாலியும் போயிருச்சு
             கதறி அழவும் முடியல
              கண்ணீர் விடவும் முடியல
மகளைப் பெத்த நானோ
மனசொடஞ்சு போனே(ன்)
              வாரிச கர சேர்க்க
              வாழ்ந்து தானே ஆகனு(ம்)
கந்து வட்டி வாங்கியாச்சு(ம்) - மகள
கலெக்டருக்கு படிக்க வைப்பே(ன்)

-  Yogiraj , Chennai
****
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
****
Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - F.Aysha , Salem

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****

கவிதை

அம்மா 🤩என்ற ஒரு வார்த்தை!...
மாயமோ 🪄அல்ல மந்திரமோ✨!...
தன் சிறு 😒தொழிலில்!..
கடினத்தை😕 கண்டும்!...
பெரும்😁 இன்பத்தை கண்டாயோ!...
மகளின்👩‍👧 வெற்றி படிகளாக!...
நீயே 😍மாறினாயோ!...
தோள்🤩 கொடுத்தாயோ தோழியாக!...
உன்😒 துயரிலும்!...
தன் மகள்🕊️ உயர பறக்க வேண்டுமென!...
சிறகில்லாமல்😇 நீ அலைந்தாயோ!...
அவளின்😻 வெற்றியைக் காண😘!...

  - F.Aysha, Salem.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

Thursday, 14 February 2019

கண்ணம்மா என் காதலி

பாயுமொளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு 
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நான் உனக்கு 
வாயுரைக்க வருகுவதில்லை
வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...
வீணையடி நீ எனக்கு
மேவும் விறல் நானுனக்கு 
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி 
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...
வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு
பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....
வெண்ணிலவு நீ எனக்கு
மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு
பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....
வீசுகமழ் நீ எனக்கு
விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு
பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே
நின்னழகாய் எத்துறைப்பேன் 
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....
காதலடி நீ எனக்கு
காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு
விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கிவரும் தீஞ்சுவையே நாதவடிவானவளே நல்ல உயிரே  கண்ணம்மா....
நல்லவுயிர் நீ எனக்கு
நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு
சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே
எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை
மோதுமின்பமே கண்ணம்மா...
தாரையாடி நீ  எனக்கு
தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு
வெற்றியடி நான் உனக்கு
தரணியில்  வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!
-மகாகவி பாரதியார்...

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....