Showing posts with label Motivational Stories. Show all posts
Showing posts with label Motivational Stories. Show all posts

Sunday, 19 December 2021

சாதிக்க நினைப்பவர்களுக்கு சுஜாதா வழங்கிய அறிவுரைகள் ...

சாதிக்க நினைப்பவர்களுக்கு
எழுத்தாளர் சுஜாதா வழங்கிய  அறிவுரைகள் 

1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை  விட   சிறந்த   நண்பனில்லை  ....

2. உடலுழைப்பை  அதிகரி .... அது   மட்டுமே   உன்னை   உயர்த்தும்  ,  ஆனந்தமும்   ஆரோக்கியமும்   அதில்   மட்டுமே   கிடைக்கும்  ..

3. குளிர்ந்த   நீரில்   குளி . உடல்  சுறுசுறுப்பாகும்  ...

4. தியானம்  கைக்கொள்.... உன்னை   நீ   உணர்ந்து  கொள்ள   அது  மட்டுமே   வழி காட்டும்  ....

5. இரவு உறங்கும்  முன் நெடுந்தொலைவு   நட .... உன்   தூக்கம்   இன்பமாக  இருக்கும்  ...

6. தாய்  தந்தையைப்   போற்றி   வணங்கு  ..... அது   உன்   கடமை.     

7. உணவில்  கீரை   சேர்த்துக் கொள் ....

8. எத்தனை  வலித்தாலும்  அழாதே  . சிரி  . வலிமைக்குக்  மேல்   வலிமை   பெற்று   வானம்   தொடுவாய்  ....

9. ஆத்திரம்   அகற்று .
எதற்கும்  கோபப்படாதே ....
கோபம்   உன்னை   ஒரேயடியாக   அழித்து விடும் ....

10. கேலிக்கு   புன்னகையை    பரிசாக்கு  ...

11. கோபத்திற்கு   மௌனத்தைக்   கொடு  . திருப்பித்  தாக்கி விடாதே  ....

12. நட்புக்கு   நட்பு   செய் .
 பகைவனைக்  கூட   நேசிக்கப்  பழகு  .....

13. வேலை   சொல்லித்  தருபவரிடம்  மிகப் பணிவாக  இரு  ....
மேலும்   மேலும்   உயர்வாய்  ...

14. அலட்சியப்படுத்தினால்   விலகி   நில் .  ஆத்திரப்பட்டுவிடாதே  ....

15.. அன்பு   செய்தால்   நன்றி  சொல் .... நன்றியுணர்வு    உன்னைப்  பெரியவனாக்கும்  ...

16. இதமாகப்  பேசு .
  இனிமைகள்   உன்னை   அரவணைத்துக்  கொள்ளும்  ....

17 . நீயும்   நானும்   எதைச்   செய்தாலும்   இறைவன்   மௌனமாகப்   பார்த்துக் கொண்டே   இருக்கிறார்  .....அவருக்கு   நாம்   பதில்   சொல்லியே   ஆக வேண்டும் .... ஆகவே    நல்லதைச்   செய்  .....

நீ ஜெயிப்பாய்....    நிச்சயமாக  ஜெயிப்பாய் ..

வாழ்க்கையில்   உன்னத   நிலைக்கு   வருவாய்.

நன்றி

________

Sathiskumar Education

_____________

Data : Collected from Various places and Internet

Sunday, 1 November 2020

வாழ்க்கை வாழ்வதற்கே

அனைவருக்கும் வணக்கம் ,

வாழ்க்கை வாழ்வதற்கே...

உண்மைதான் வாழ்க்கையில் என்ன ஆனாலும் நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அதனை முறித்துக் கொள்ளும் உரிமை நமக்கு இயற்கையில் கிடையாது , அது மிகவும் கோழைத்தனமானதும் தவறானதும் கூட, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடியலும் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ற ஒரு நோக்கத்துடனேயே ஒவ்வொருவரின் நாட்களும் தொடங்குகின்றன அவ்வாறே அந்த நாட்கள் முடியும் என்பதில் சந்தேகமே...

இருப்பினும் நாம் அந்த நாளை வாழ்ந்துதான் ஆகவேண்டும் அடுத்த ஒரு விடியலுக்காக காத்து தான் இருக்க வேண்டும் இவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் மாறி மாறி தந்து கொண்டுதான் இருக்கிறது இவ்வாறாக உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அன்றைய நிகழ்வுகளை அப்போது ரசித்துவிட்டு அந்த நொடிப்பொழுதில் இன்பமாக இருக்க பழகுங்கள் அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் செல்வம் தேவைதான் ஆனால் அது மட்டுமே நிலையான போதுமான ஒன்று கிடையாது...

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் இப்படிக்கு ,

அன்புடன்
சதீஷ்குமார்,
Sathiskumar Education.

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....