Sunday, 19 December 2021

சாதிக்க நினைப்பவர்களுக்கு சுஜாதா வழங்கிய அறிவுரைகள் ...

சாதிக்க நினைப்பவர்களுக்கு
எழுத்தாளர் சுஜாதா வழங்கிய  அறிவுரைகள் 

1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை  விட   சிறந்த   நண்பனில்லை  ....

2. உடலுழைப்பை  அதிகரி .... அது   மட்டுமே   உன்னை   உயர்த்தும்  ,  ஆனந்தமும்   ஆரோக்கியமும்   அதில்   மட்டுமே   கிடைக்கும்  ..

3. குளிர்ந்த   நீரில்   குளி . உடல்  சுறுசுறுப்பாகும்  ...

4. தியானம்  கைக்கொள்.... உன்னை   நீ   உணர்ந்து  கொள்ள   அது  மட்டுமே   வழி காட்டும்  ....

5. இரவு உறங்கும்  முன் நெடுந்தொலைவு   நட .... உன்   தூக்கம்   இன்பமாக  இருக்கும்  ...

6. தாய்  தந்தையைப்   போற்றி   வணங்கு  ..... அது   உன்   கடமை.     

7. உணவில்  கீரை   சேர்த்துக் கொள் ....

8. எத்தனை  வலித்தாலும்  அழாதே  . சிரி  . வலிமைக்குக்  மேல்   வலிமை   பெற்று   வானம்   தொடுவாய்  ....

9. ஆத்திரம்   அகற்று .
எதற்கும்  கோபப்படாதே ....
கோபம்   உன்னை   ஒரேயடியாக   அழித்து விடும் ....

10. கேலிக்கு   புன்னகையை    பரிசாக்கு  ...

11. கோபத்திற்கு   மௌனத்தைக்   கொடு  . திருப்பித்  தாக்கி விடாதே  ....

12. நட்புக்கு   நட்பு   செய் .
 பகைவனைக்  கூட   நேசிக்கப்  பழகு  .....

13. வேலை   சொல்லித்  தருபவரிடம்  மிகப் பணிவாக  இரு  ....
மேலும்   மேலும்   உயர்வாய்  ...

14. அலட்சியப்படுத்தினால்   விலகி   நில் .  ஆத்திரப்பட்டுவிடாதே  ....

15.. அன்பு   செய்தால்   நன்றி  சொல் .... நன்றியுணர்வு    உன்னைப்  பெரியவனாக்கும்  ...

16. இதமாகப்  பேசு .
  இனிமைகள்   உன்னை   அரவணைத்துக்  கொள்ளும்  ....

17 . நீயும்   நானும்   எதைச்   செய்தாலும்   இறைவன்   மௌனமாகப்   பார்த்துக் கொண்டே   இருக்கிறார்  .....அவருக்கு   நாம்   பதில்   சொல்லியே   ஆக வேண்டும் .... ஆகவே    நல்லதைச்   செய்  .....

நீ ஜெயிப்பாய்....    நிச்சயமாக  ஜெயிப்பாய் ..

வாழ்க்கையில்   உன்னத   நிலைக்கு   வருவாய்.

நன்றி

________

Sathiskumar Education

_____________

Data : Collected from Various places and Internet

Wednesday, 4 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Mohammed Harish Akmal, Anthiyur.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****
கவிதை

திறமையோடு சிறிது பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் வறுமை என்பதே வராது...
இதை உணர்ந்தவர் வாழ்வில் துயரம் என்பதே இருக்காது

- Mohammed Harish Akmal,
Anthiyur , Erode 
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********
Photo Credit : ARToons

Tuesday, 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - இரா.காயத்ரி , தருமபுரி மாவட்டம்.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇

(Photo Credit: ARToons)

****
கவிதை

ஒரு முழம் பூ விற்க ..
ஓயாமல் காத்திருக்க..
ஒருவரும் வரவில்லையே
கொரனாவின் ஊரடங்கால்...

பள்ளிக்கூடம் மூடியிருக்கு..
படிக்க என் பிள்ளைக்கு 
ஆசையிருக்கு 
என் நிழலில் பாடம் படிச்சிருக்க..
எப்ப சாமி பள்ளிக்கூடம் 
திறக்கும் ?

- இரா.காயத்ரி,
தருமபுரி மாவட்டம்.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - Parameshwaran , Namakkal

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****
கவிதை-1

புத்தகம் பிடித்த பூச்சரமே! நான் தவமிருந்து வாங்கி வந்த வரமே, சாலையில் நீ படி நானிருப்பேன் நிழலாக, நாளை நீ வாழ்வில் முன்னேறு நானிருப்பேன் மரமாக,,,

கவிதை-2

கல்விக்கு போராடுது மலர் ஒன்று, அதற்காக வெயிலில் வாடுது வேர் இன்று...

- Parameshwaran, Drawing Master,
Namakkal.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - Suryaprakash ,Bhavani (TK) , Erode.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****

கவிதை

இறந்தகாலத்தை எண்ணி...
நிகழ்காலத்தில் வருந்தி கொண்டு இருக்கும் தாய்க்கு தெரியவில்லை...

பின்னே தனது எதிர்காலம் கல்வி என்னும் வளர்ச்சி பாதயில் போகிறது என்று...

- Suryaprakash , Bhavani (TK) , Erode.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

படம் பார்த்து கவிதை சொல் - Dharani , Bhavani (TK) , Erode.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை

வேகாத 
    வெயிலிலே
வியாபாரம் 
     செய்யயில
வேதனைதான்       
     நெஞ்சினிலே...
தனக்கோ
     தன் பிள்ளைக்கோ
தலைவாரி
     பூச்சூடும்
வேளைதான் 
     வந்திடுமோ?
நாளும் தான்
     கூடிடுமோ?
பூச்சரம்தான்   
     விக்கலியே 
பூத்த வேர்வையும்
      காயலியே...
வேதனைதான் 
       தீரலயே ...
மகராசி மகளுந்தான்
மாற்றந்தான் தருவானு
மனசாரப் பாடுபடும்
மாதரசி நீதானோ ?
கடந்து போகும் காரெல்லாம்
கருணை வச்சு
வாங்கினா
கந்துக் கடன அடைச்ச பின்னே
கஞ்சித் தண்ணி
குடிக்கலானு
கனவு காணும்
தாயே...
காத்திருந்து பாரம்மா... 
காரேறி உன் மகளும்
பார் போற்ற வந்திடுவா...
பாரம் இறக்கி 
வைச்சிடுவா...
படிக்கும் புள்ள முகம் பார்த்து
பசி அடக்கிக் 
கொள்ளம்மா ...

- Dharani , Bhavani (TK) , Erode .
****
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
****
Photo Credit : ARToons

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....