Saturday, 8 October 2022

ஆசிரியரின் "அடி"

ஆசிரியரின் "அடி"



*ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..*
 சிகரெட் பிடிக்கப் பழகினான்...

பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.

தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.

அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...

 *பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.*

இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்...

கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,...

இறுதியாக..
 *தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.* அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..

தூக்கிற்கு முன்தினம் *கடைசி ஆசை கேட்கப்பட்டது.*

பெற்றோரை சந்திக்க விரும்பினான்.

பெற்றோரும் வந்தனர்.

கதறினர்.....
*போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,*

மகன் அமைதியாகச் சொன்னான். *அவர்கள் காரணமில்லை,...*

 *நீங்கள்தான்* " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது *ஆசிரியர்* என்னை கண்டித்து அடித்தார்.

வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து *ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....*

 *அடித்து மிரட்டி..* போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.

அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் ..... *தூக்கு மேடை வரை வந்திருக்கிறது*

*எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..*

ஆசிரியர் *கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.*

இதை பெற்றோர் உணரவேண்டும்.

சிந்திக்க வைத்த பதிவு...

*பரிவும், பாசமும்..... பிள்ளைகளின் பண்பையும்,வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.


- Thanks for Reading - Share with your friends 


//Credits:
Image : Internet
Content: Facebook//

ஒரு நிமிட கதை - நகைச்சுவை நேரம்

போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...

முதல் நாள் :

எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..

நம்ம உடம்பை Control பண்றதை விட.,

மனசை Control பண்றது கஷ்டம்..

ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது

வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..

இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..

நீங்க ஒரு காரை Start பண்றீங்க..

ஆனா அந்த கார்...

Right-ல திருப்பினா - Left-ல போகுது.,

Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,

பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..

மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,

காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..

அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..

ஆனா எங்க குருவோ..,

" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "

அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..

அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..

அப்ப குரு பார்த்துட்டார்

என்ன கேட்டேனா.. ?

" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?

நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "

இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😄🙄😄🙄😄🙄

Saturday, 21 May 2022

ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்

ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்


- பசு
- கொடு
- இறைச்சி
- அம்பு
- தலைவன்
- மதகு நீர் தாங்கும் பலகை
கா - சோலை
கூ - பூமி
கை - ஒழுக்கம்
கோ - அரசன்
சா - இறந்து போ
சீ - இகழ்ச்சி
சே - உயர்வு
சோ - மதில்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - கடவுள்
தை - தைத்தல்
நா - நாவு
நீ - முன்னிலை ஒருமை
நே - அன்பு
நை - இழிவு
நோ - வறுமை
பா - பாடல்
பூ - மலர்
பே - மேகம்
பை - இளமை
போ - செல்
மா - மாமரம்
மீ - வான்
மூ - மூப்பு
மே - அன்பு
மை - அஞ்சனம்
மோ - முகத்தல்
யா - அகலம்
வா - அழைத்தல்
வீ - மலர்
வை - புல்
வெள - கவர்
நொ - நோய்
து - உண்

படித்ததற்கு நன்றி ...

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மேலும் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்


Friday, 20 May 2022

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - முழுமையாக

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்


( நூலின் பெயர் பாடல்களின் எண்ணிக்கை பாடுபொருள் மற்றும் ஆசிரியரின் பெயர் என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது )


1) திருக்குறள் - 1330 - அகம் , புறம் - திருவள்ளுவர்

2) நாலடியார் - 400 - அறம் - சமணமுனிவர்கள்

3) நான்மணிக்கடிகை - 101 - அறம் - விளம்பிநாகனார்

4) இன்னா நாற்பது - 41 - அறம் - கபிலர்

5) இனியவை நாற்பது - 40 - அறம் - பூதஞ்சேந்தனார்

6) திரிகடுகம் - 100 - அறம் - நல்லாதனார்

7) ஏலாதி - 80 - அறம் - கணிமேதாவியார்

 8) ஆசாரக்கோவை - 101 - அறம் - பெருவாயின் முள்ளியார்

9) முதுமொழிக்காஞ்சி - 100 அடிகள் - அறம் - கூடலூர்கிழார்

10) பழமொழி நானூறு - 401 - அறம் - முன்றுறை அரையனார்

11) சிறுபஞ்சமூலம் - 104 - அறம் - காரியாசான்

12) ஐந்திணை ஐம்பது - 50 - அகம் - பொறையனார்

13) ஐந்திணை எழுபது - 70 - அகம் - மூவாதியார்

14) திணைமொழி ஐம்பது - 50 - அகம் - கண்ணன் சேந்தனார்

15) திணைமாலை நூற்றைம்பது - 153 - அகம் - கணிமேதாவியார்

16) கைந்நிலை - 60 - அகம் - புல்லங்காடனார் 

17) கார் நாற்பது - 40 - அகம் - கண்ணன் கூத்தனார் 

18) களவழி நாற்பது - 41 - புறம் - பொய்கையார்

- படித்ததற்கு நன்றி ...

நிச்சயம் போட்டித்தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் .

தயவு செய்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் ..

நன்றி


👆👆👆 Click 👆👆👆

Wednesday, 18 May 2022

புத்தகங்களை பற்றிய பொன்மொழிகள்

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-



1. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

-ஆபிரகாம் லிங்கன்


2. ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!

- ஜூலியஸ் சீசர்


3. உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

- டெஸ்கார்டஸ்


4. போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு...

- இங்கர்சால்


5. சில புத்தகங்களை சுவைப்போம்... சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

- பிரான்சிஸ் பேக்கன்


6. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

- லெனின்


7. உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!

- ஆஸ்கார் வைல்ட்


8. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

- சிக்மண்ட் ஃப்ராய்ட்


9. பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ...

- மாசேதுங்


10. ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்...

வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.

- சாமுவேல் ஜான்சன்

_________________

Content From : Internet

Thanks for Reading

Wednesday, 20 April 2022

TNPSC GK Questions ( In Tamil )

TNPSC GK Questions (In Tamil)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுக்கான பொது அறிவு வினாக்கள்

1) லென்சின் திறனை குறிக்கும் SI அலகு ?
டையாப்டர் 

2) ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படுவது ?
எலும்பு மென்மையாதல்

3) "தங்கப்போர்வை நாடு" எனப்படுவது ?
ஆஸ்திரேலியா 

4) ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எந்த மாநகரில் அமைந்துள்ளது?
சென்னை 

5) மனித உடலின் எந்த பாகம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருக்கும்?
 கண்கள் 

6) மின்கலங்களில் பயன்படுத்தப்படும் தனிமம் எது ? காரியம் 

7) பாதரசத்துடன் சேராத உலோகம்? இரும்பு 

8) பயோரியா வியாதியால் உடலின் எந்தப் பகுதி பாதிக்கப்படும்?
பற்கள்

9) இந்தியாவில் இருமுறை தற்காலிக பிரதமராக இருந்தவர் யார் ? குல்ஜரிலால் நந்தா 

10) உவமை கவிஞர் என அழைக்கப்படுபவர் யார் ?
 சுரதா

படித்தமைக்கு நன்றி ❣️

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Thanks for Reading ❤️

ALL THE BEST FOR YOUR EXAMS

- SATHISKUMAR EDUCATION

LINK :- YOUTUBE

TNPSC GK Questions ( In English )

TNPSC GK Questions - (In English)

1) Plants receive their nutrition mainly from ____?
soil 

2) Tsunami is a word in which language ?
Japanese

3) ____ Controls the working of share market in India ?
SEBI

4) Which bank as become the first bank in the country to achieve the milestone of issuing 1 crore FASTags?
Paytm payments Bank 

5) What was the capital of Bhamini Kingdom ?
Gulbarga 

6) The main store house of sperm is ___? Epididymis

7) The dynamo was invented by ___
Faraday 

8) In the short period , ____ plays an important role in share market?
Demand 

9) Which country is the top importer of Dyes from India?
USA 

10) Which of the following Indus Valley sites is now in Pakistan ?
Harappa

Thanks for Reading ❣️

ALL THE BEST FOR YOUR EXAMS

BY

SATHISKUMAR EDUCATION

LINK :- YOUTUBE

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....