Saturday 8 October 2022

ஆசிரியரின் "அடி"

ஆசிரியரின் "அடி"



*ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..*
 சிகரெட் பிடிக்கப் பழகினான்...

பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.

தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.

அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...

 *பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.*

இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்...

கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,...

இறுதியாக..
 *தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.* அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..

தூக்கிற்கு முன்தினம் *கடைசி ஆசை கேட்கப்பட்டது.*

பெற்றோரை சந்திக்க விரும்பினான்.

பெற்றோரும் வந்தனர்.

கதறினர்.....
*போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,*

மகன் அமைதியாகச் சொன்னான். *அவர்கள் காரணமில்லை,...*

 *நீங்கள்தான்* " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது *ஆசிரியர்* என்னை கண்டித்து அடித்தார்.

வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து *ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....*

 *அடித்து மிரட்டி..* போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.

அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் ..... *தூக்கு மேடை வரை வந்திருக்கிறது*

*எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..*

ஆசிரியர் *கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.*

இதை பெற்றோர் உணரவேண்டும்.

சிந்திக்க வைத்த பதிவு...

*பரிவும், பாசமும்..... பிள்ளைகளின் பண்பையும்,வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.


- Thanks for Reading - Share with your friends 


//Credits:
Image : Internet
Content: Facebook//

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...