Monday 21 November 2022

10th Standard Maths - TN Syllabus - March 2022 - Public Exam Question

10th Standard Maths - TN Syllabus - March 2022 - Public Exam Question 

PDF LINK 

இடும்பைக்கு இடும்பை கொடுப்பர்

👉 பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.
👉 தயிருக்கு கஷ்டம்கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.
👉 வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.
👉 பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.
👉 இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி கஷ்டம் - சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.
👉 பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.
👉 பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.
👉 தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.
👉 வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.
👉 ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.
👉 உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது. அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள். தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள். தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள். பின் அப்பொழுது பாருங்கள். நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையான மனிதனாக இருப்பீர்கள்.

Wednesday 9 November 2022

இன்றைய செய்திகள் - Today News Headlines - 09.11.2022 (Tamil & English)

இன்றைய செய்திகள்

09.11.22
* தமிழகத்தின் 17வது காட்டுயிர் காப்பகம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் அமைத்து அரசாணை வெளியீடு.

* 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

* தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள்: தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்.

* தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* பயங்கரவாதத்திற்கான நிதி தடுப்பு நடவடிக்கை: இந்தியா தலைமையில் அடுத்த வாரம் டெல்லியில் சர்வதேச மாநாடு.

* பருவநிலை மாற்ற உச்சி மாநாடு தொடக்கம் - 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் எகிப்தில் குவிந்தனர்.

* அண்டத்தின் 'வைல்ட் டிரிப்லெட்' எனப்படும் இரண்டு விண்மீன் மண்டலங்களின் புகைப்படத்தை  நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.

* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்: 12 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.

* கேலோ இந்தியா கைப்பந்து: தமிழக பெண்கள் அணி சாம்பியன்.

Today's Headlines

* Tamil Nadu's 17th Wildlife Sanctuary: An GO is issued to set it at Dharmapuri, Krishnagiri.

*  Chief Minister M. K. Stalin has issued the Tamil Nadu Aerospace and Defense Industry Policy to provide employment to 1 lakh people in 10 years.

* 5093 relief camps are on standby: Information from Tamil Nadu Disaster Management Department.

 * The Government of Tamil Nadu has issued an ordinance to set up an expert committee to enact laws for the implementation of social justice principles at all levels in Tamil Nadu government affairs.

* To abolish Anti-terrorist financing action: India-led international conference will be held in Delhi next week under the heading of India 

 * Climate Change Summit kicks off - More than 100 world leaders gathered in Egypt

*  NASA's Hubble Space Telescope has captured a picture of two galaxies known as the 'Wild Triplet' of the universe.

 * Asian Boxing Championship: India secures 12 medals

 * KELO India Volleyball: Tamil Nadu Women's Team Champion.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Content: Internet
// Education Purpose Only//

Friday 4 November 2022

இன்றைய செய்திகள் - Today News Headlines - 04.11.2022 - Friday (Tamil & English)

இன்றைய செய்திகள்

04.11.22

* சென்னை - அண்ணா நகரில் 30 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, 10 நிமிடத்தில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

* பருவமழையின்போது எவ்வித தடையும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 11 ஆயிரம்ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

* வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு: 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிப்பு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

* 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

* டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி.

* ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: பிரக்ஞானந்தா, நந்திதாவுக்கு தங்கம்.

* உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கங்களை வென்றுள்ளார்.
 
Today's Headlines


 * 4.5 cm of rain has been recorded in 30 minutes in Chennai - Anna Nagar.  Specifically, 2 cm of rain has been recorded in 10 minutes.

 * Electricity Minister Senthil Balaji  said  11 thousand additional workers have been appointed across Tamil Nadu to ensure smooth power distribution during monsoons.

* The Chennai Meteorological Department has warned that there is a possibility of very heavy rain in the delta districts of Tamil Nadu for the next 2 days.

*  Linking of Aadhaar Number with Electoral Roll:  Details of 55 Percent peoples were collected - Tamil Nadu Chief Electoral Officer Informed

*   The AD-1 missile   which intercepts and destroys enemy missiles  from a distance of 5000 K.M was tested on the coastal areas of Odisha and the test was declared successful.

 * US has warned that Iran may attack Saudi Arabia's energy production facilities.

*  T20 World Cup: Pakistan beat South Africa

* Asian Chess Championship Series: Gold for Pragnananda and Nandita

 *  World Junior Table Tennis: Tamil Nadu player Balamurugan won 2 medals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Content: Internet
//Education Purpose only//

Thursday 3 November 2022

இன்றைய செய்திகள் - Today News - 03.11.2022 (Tamil & Eng)

இன்றைய செய்திகள்

03.11.22
* வடகிழக்குப் பருவமழை | தமிழகம் முழுவதும் 5093 நிவாரண முகாம்கள் தயார்: பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தகவல்.

* ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு புதிய சட்டம் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* தமிழகத்தில் நிர்வாகத்துறை நடுவர்களுக்கு குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

* மோர்பி பாலத்தின் கேபிள் சீரமைக்கப்படவில்லை: நீதிமன்றத்தில் அரசு தரப்பு அதிர்ச்சித் தகவல்.

* நேற்று ஒரே நாளில் 10 ஏவுகணை சோதனை: வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு.

* நீல திமிங்கலங்கள் வருடத்திற்கு 10 மில்லியன் துண்டுகள் நுண் ஞெகிழி கழிவுகளை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டி20 உலகக் கோப்பை: வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா, சக்காரி வெற்றி.

 * ஐ-லீக் கால்பந்தின் 2022-2023 சீசன் நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Today's Headlines

 * North East Monsoon 5093 relief camps are ready across Tamil Nadu: Disaster Management Minister informs.

* Fixation of compensation for already acquired lands under new law: High Court orders.

 * The High Court ordered the Tamil Nadu government to provide training to administrative judges of Tamil Nadu on criminal laws.

* Tamil Nadu is likely to receive heavy rain for the next 5 days, according to the Chennai Meteorological Department.

* The central government has decided to grant citizenship to minorities who came from Pakistan, Bangladesh and Afghanistan.

* Cable of Morbi Bridge is not repaired : Shocking statement by the government in court.

 *10 missile are tested in a single day yesterday: South Korea accuses North Korea.

* Blue whales ingest 10 million pieces of plastic waste per year, according to a report released by scientists.

 * T20 World Cup: India beat Bangladesh by thrilling victory - ranks top in the statistics 

 * Women's Tennis Championship: Sabalenka, Sakari won.

* The All India Football Federation has announced that the 2022-2023 season of I-League Football will begin on November 12.
 


 Prepared by

Covai women ICT_போதிமரம்

Collected from: Internet

//Education purpose only//

இன்றைய செய்திகள் - 02-11-2022

இன்றைய செய்திகள்

02.11.22

* சென்னை மெட்ரோவில் அக்டோபரில் மட்டும் 61.56 லட்சம் பேர் பயணம்.

* மழையால் பாதிப்பு: நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

* சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி.

* குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து: 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் வரை அனுமதி அளித்ததே விபத்துக்கு காரணம்.

* சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் ஐபோன் ஆலையில் இருந்து ஊழியர்கள் தப்பியோட்டம்.

* சோமாலியாவில் 120 பேர் பலியான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி.

* மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி: சென்னை அணி 'சாம்பியன்'.

* சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் இளம்பரிதி முதலிடம்.

* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்

-: Source: Internet 

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...